
அரசுப் பணியில் பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய 30% இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கென 10% உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பு ₹4,000-லிருந்து ₹8,000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேநேரம், கணவரை இழந்தவர்கள் மட்டுமே இப்பிரிவில் வருவார்கள். விவாகரத்து பெற்றவர்கள் இதன் கீழ் சலுகை கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.